Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

80 இலட்ச ரூபாய் போலி விசாவுடன் கனடா செல்ல முயன்ற யாழ்.தம்பதியினர் கைது




போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர் 

tamilnews1 செய்தி குழுமத்தில் இணைந்து கொள்ள இந்த இணைப்புக்கு செல்லுங்கள் 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மனைவியும் 40 வயதுடைய கணவனுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் ஜப்பானின் நரிட்டா நகரத்திற்குச் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது, சோதனை நடவடிக்கைகளுக்காக தமது ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகளிடம் சமர்ப்பித்தபோது, அந்த ஆவணங்களில் சந்தேகம்கொண்ட விமான நிலைய அதிகாரிகள், அதனை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து, விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேகநபர்களின் கனடா விசா போலியானவை என தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தரகர் ஒருவரிடம் 80 இலட்சம் ரூபா தருவதாக கூறி இந்த போலி கனடா விசாவை தயாரித்துள்ளதாகவும், ஜப்பானின் நரிட்டா நகரத்திற்குச் சென்று பின்னர் அங்கிருந்து கனடாவுக்கு தப்பிச் செல்ல தயாராக இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளன. இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் 

No comments