யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை மூவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குடும்ப தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர், தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா பகுதியில் இருந்து வாகனத்தில் ஆட்களை அழைத்து வந்து வீட்டிற்குள் புகுந்து கம்பி,கற்களால் தாக்குதல் நடாத்தியதாக தெரியவருகின்றது.
No comments