Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Thursday, May 29

Pages

Breaking News

இளைஞனை கடத்தி 08 மில்லியனுக்கும் அதிகமான பணம் கொள்ளை - யாழ். இளைஞன் கட்டுநாயக்கவில் கைது.


நபரொருவரை கடத்திச் சென்று 8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி ஒருவரை கடத்திச் சென்று 84 இலட்சத்து 78 ஆயிரம் ரூபா கொள்ளையடித்த குற்றச்சாட்டு தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணைங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின் அடிப்படையில்,  கொள்ளையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கொள்ளைச் சம்பவத்தை திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேக நபர், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய்க்குப் புறப்படுவதற்காக விமான நிலையத்தை வந்தடைந்தபோது, ​​குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலைய பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் எனவும், அவரை மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளார் எனவும் விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்