யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மிருசுவில் பகுதியை சேர்ந்த ந.புஸ்பராணி (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நான்கு நாள் தொடர்ச்சியான காய்ச்சல் காரணமாக சுகவீனமுற்றிருந்த நிலையில் , கடந்த 11ஆம் திகதி சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற வேளை , அங்கு மயங்கி விழுந்துள்ளார்.
அதனை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
No comments