வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
அதில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதன்போதே மாவட்ட செயலகத்துக்கு முன்னால் பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments