Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கட்டுநாயக்கவில் வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு


கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் துப்பாக்கிகள் மற்றும்  தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவின் ஹீனடியன பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மினுவாங்கொடை, ஹீனடியன பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வீடொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, வீட்டில் இருந்து 9mm ரக  தோட்டாக்கள் 47 மற்றும் போர 12 ரக தோட்டாக்கள் 20 வும் வைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டில் இருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரின் வீட்டை மேலும் சோதனை செய்தபோது, ​​வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 02 ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகள், 02 வெற்று மெகசின்கள், ஒரு பிஸ்டல் ரக துப்பாக்கி , வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 02 வெற்று மெகசின்கள், ஒரு வாகன இலக்க தகடு , காப்பீட்டு அட்டை மற்றும் 03 துப்பாக்கி உரிமம் புதுப்பித்தல் சீட்டுக்கள் ஆகியவற்றை பொலிசார் மீட்டுள்ளனர்.

No comments