புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புளியங்குளம், பழையவாடி பகுதியைச் சேர்ந்த 0 ந.மதுசாளினி (வயது 06) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சிறுமி கொய்யா மரத்தில் ஏறி விளையாடியுள்ளார்.
அதன் போது, தவறுதலாக கீழே விழுந்த போது மின் மோட்டருக்கு சென்ற மின்சார வயரின் இணைப்பில் சிறுமி சிக்கியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை புளியங்குளம் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments