நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தலைமையில் வடக்கு கிழக்கில் சுயேட்சை அணி களமிறக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, யாழ் மாவட்டத்தில் யாழ் மாநகர சபை உள்ளிட்ட ஐந்து சபைகளுக்கு நேற்றையதினம் திங்கட்கிழமை கட்டுப்பணம் செலுத்தி இருந்த நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஏனைய சபைகளுக்கு கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளார்.
இதேபோன்று வடக்கு கிழக்கில் உள்ள ஏனைய உள்ளூராட்சி மன்றங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தலைமையில் சுயேட்சை குழுவாக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments