Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

துப்பாக்கிச்சூட்டில் இளம் யுவதிக்கு தொடர்பு?


கிரேண்ட்பாஸ் - நாகலகம் வீதி பிரதேசத்தில் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் 24 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால், மேலும் இரண்டு நபர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது. 

இந்தக் குற்றம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் மார்ச் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டார். 

இதையடுத்து குறித்த சந்தேகநபரின் 24 வயதுடைய மனைவியே நேற்று (20) கிரேண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 

சம்பவம் தொடர்பில் கிரேண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments