Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Friday, May 23

Pages

Breaking News

யாழில் இயங்கிய வன்முறை கும்பலின் தலைவர் சிறையில்


யாழ்ப்பாணத்தில் இயங்கிய பிரபல வன்முறை கும்பலின் தலைவர் என கூறப்படும் நபருக்கு, யாழ் நீதவான் நீதிமன்று சிறைத்தண்டனை விதித்துள்ளது:

யாழில் இயங்கிய வன்முறை கும்பல் ஒன்றின் தலைவர் என கூறப்படும் நபரை, வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸார் தேடி வந்த நிலையில், கடந்த 2022ஆம் உரும்பிராய் பகுதியில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.

தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது, கூரிய ஆயுதங்களை காட்டி பொலிஸாரை அச்சுறுத்தி விட்டு தப்பி சென்றார்.

சம்பவம் நொடர்பில் பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில், சிறிது காலத்தில் அந்நபரையும் கைது செய்து மன்றில் முற்படுத்தி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.


அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தீர்ப்புக்காக திகதியிடப்பட்டருந்த நிலையில், வழக்கு மன்றிர் எடுத்துக்கொள்ளப்பட்ட போது,  குறித்த நபர் மீதான குற்றச்சாட்டில் ஒன்றிற்கு 3 மாத கால கட்டாய சிறைத்தண்டனை விதித்த மன்று ஏனைய குற்றச்சாட்டுகளுக்கு, 2 வருடம் , 4 மாத சிறைதண்டனை விதித்து, அதனை 10 வருட காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.