Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். யானை மிரண்டதால் , இருவர் காயம்




யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிக்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தாவடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் , நேற்றைய தினம் புதன்கிழமை இரவு திருமஞ்ச திருவிழா இடம்பெற்றது. திருவிழாவிற்காக தென்னிலங்கையில் இருந்து இரு யானைகள் அழைத்து வரப்பட்டு இருந்தன. 

மஞ்ச திருவிழாவின் போது , மஞ்சத்திற்கு முன்பாக இரு யானைகளும் அழைத்து வரப்பட்டன. அவ்வேளை வெடிகள் கொளுத்தப்பட்டு , தீப்பந்த விளையாட்டுக்கள் இடம்பெற்றன. 

அதன்போது யானைகளில் ஒன்று மிரண்டதில் , அருகில் நின்ற இருவர் காயமடைந்துள்ளனர் காயமடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

ஆலய திருவிழாக்களுக்கு யானைகளை அழைத்து வருவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில் , உரிய அனுமதிகள் இன்றி யானைகள் அழைத்து வரப்படுகின்றன 

அவ்வாறான நிலைகளில் யானைகள் மிரண்டாலோ , யானைகளுக்கு மதம் ஏற்பட்டாலோ அதனை கட்டுப்படுத்த முடியாத நிலைமைகள் ஏற்பட்டால் உயிரிழப்புக்கள் ஏற்படும் அபாயங்கள் உள்ளதனால் , யானைகளை அழைத்து வருவதற்கு உரிய அனுமதிகள் ஊடாக கட்டுப்பாடுகள் விதிக்க வடமாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. 


No comments