ஈழத்து கலைஞர்களின் பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தில் உருவான "தீப்பந்தம்" திரைப்படம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ராஜா திரையரங்கில் விசேட காட்சியாக திரைப்படவுள்ளது.
தொடர்ந்து 31ஆம் மற்றும் 1ஆம் திகதிகளில் ராஜா திரையரங்கிலும் லண்டன், பிரான்ஸ் மற்றும் கனடாவிலும் திரையிடப்படவுள்ளது
லண்டன் AMLUS தயாரிப்பில், BLACKBOARD INTERNATIONAL படக் குழுமத்தால் உருவாக்கப்பட்டுள்ள தீப்பந்தம் திரைப்படம் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில் திரைப்படவுள்ளது. அதேவேளை , புலம்பெயர் தமிழர்கள் வசிக்கும் நாடுகளிலும் திரையிடலுக்கு தயாராகி வருகிறது.
‘டக் டிக் டொஸ்’,‘புத்தி கெட்ட மனிதன்’ஆகிய வெற்றிப்படங்களை உருவாக்கிய குழுவினர் மீண்டுமொரு முயற்சியாக தீப்பந்தம் திரைப்படத்தினை உருவாக்கியுள்ளனர்.
No comments