கல்கிஸ்ஸ பிரதேசத்தில் 3 இடங்களை இலக்கு வைத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸ, ஜபோஸ்லேன் பிரதேசத்தில் 10 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, ராஹூல வீதி பகுதியில் 5 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்நலையில், கைதான சந்தேகநபர்கள் 32, 39 மற்றும் 54 வயதுடைய மொரட்டுவ, இரத்மலானை மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
No comments