யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த செல்வராசா அனிஸ்ரன் (வயது 29) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞனும், அவரது நண்பரும் கடந்த 11 ஆம் திகதி யாழில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த போது வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டனர்.
இதன்போது பருத்தித்துறை பக்கத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகினர்.
விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த நால்வரும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூவர் வீடு திரும்பிய நிலையில் குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
No comments