Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பொகவந்தலாவில் இருந்து நீர்கொழும்புக்கு சென்ற சகோதரர்கள் உள்ளிட்ட நால்வர் கடலில் மூழ்கி உயிரிழப்பு


நீர்கொழும்பு வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த நான்கு இளைஞர்களும் ஒன்றாக இனைந்து கடலில் நீராடி கொண்டிருந்த போது கடல் அலையில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து வென்னப்புவ பொலிஸார் மற்றும் கடற்படையினர் ஆகியோரின் உதவியோடு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த உதயகுமார் ஸ்ரீதரன் (வயது 17), ஸ்ரீகாந்த் சரன்ராஜ் (வயது 19), ஸ்ரீகாந்த் அஜித்குமார் (வயது 18) மற்றும் யூசுப் (வயது 27) ஆகிய நால்வரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்

இதேவேளை சடலமாக மீட்கப்பட்டவர்களுள் ஸ்ரீகாந்த் சரன்ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் அஜித்குமார் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் எனவும் உதயகுமார் ஸ்ரீதரன் உறவினர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட நான்கு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வென்னப்புவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபடவுள்ளதோடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments