யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விடுவிக்க கோரி நேற்றைய தினம் புதன்கிழமை ஐந்தாம் நாளாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் நாடளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், வடமாகாண அவைத் தலைவர் சி வி கே சிவஞானம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்
அதேவேளை செம்மணியில் பகுதியில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் , நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெய்சந்திரமூர்த்தி ரஜீவன் , கணநாதன் இளங்குமரன் , ராஜமாணிக்கம் சாணக்கியன் , வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் ஆகியோரை போராட்ட களத்தில் நின்ற சிலர் அங்கிருந்து அவர்களை வெளியேற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments