யாழ்ப்பாணம் மாநகர சபையினுள் வசிக்கும் பொதுமக்கள் தரம் பிரிக்கப்பட்ட வீட்டு கழிவுகளை தினமும் காலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பிரட்டு அலுவலகங்களில் சமர்ப்பிக்க முடியும் என மாநகர சபை அறிவித்துள்ளது.
யாழ் மாநகரசபையின் திண்மக்கழிவகற்றல் செயற்பாடானது 27 வட்டாரங்களை உள்ளடக்கி 09 பிரட்டு அலுவகங்களை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு பொதுமக்கள் தரம் பிரிக்கப்பட்ட வீட்டுக்கழிவுகளினை கையளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments