Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அமைச்சர் விஜித மற்றும் ஈரான் தூதுவர் இடையே கலந்துரையாடல்


இலங்கைக்கான ஈரானிய தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தனது X கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டு, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார். 

இந்தக் கலந்துரையாடலின் போது, ​​பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்து ஈரானிய தூதுவரிடம் வலியுறுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

மோதல்கள் மேலும் அதிகரிப்பதால் பிராந்தியத்திலும் இலங்கையிலும் ஏற்படும் தாக்கம் மற்றும் ஈரானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் விஜித ஹேரத் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெறும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

குறித்த கலந்துரையாடலுக்கு பிறகு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகலாம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டார்.

No comments