Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். ஒரு கிலோ மாவா பாக்குடன் ஒருவர் கைது


யாழ்ப்பாணத்தில் கஞ்சா கலந்த மாவா பாக்கு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாண புறநகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கஞ்சா போதைப்பொருள் கலந்த மாவா பாக்கு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக , பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ கிராம் மாவா பாக்கினை பொலிஸார் மீட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments