யாழ்ப்பாணத்தில் வழுக்கியாற்றைப் புனரமைப்பு செய்து நிலத்தடி நீர்த் தேவை மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஆய்வு ஒன்றினை யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பித்துள்ளனர்
யாழ்ப்பாணம் வறுத்தலைவிளான் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கும் வழுக்கையாறு அராலியில் முடிவடைகிறது.
இந்த வழுக்கையாறு என்பது மழை காலத்தில் வெள்ள நீர் ஓடுவதால் உருவாகும் மழைக்கால ஆறாகும். அதன் ஊடாக பல குளங்களுக்கு நீர் சென்றடைவதுடன் , பல நீர் நிலைகளுக்கும் நீரை கொண்டு சேர்க்கிறது. அதனால் பல விவசாயிகள் பயன் பெறுவது மட்டுமல்ல , நிலத்தடி நீரும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
குறித்த வழுக்கையாறு சீரான பராமரிப்புகள் இன்றியும் கழிவு நீர் அவற்றுடன் கலக்க விடுவதனால் , நீர் மாசடையும் தன்மையும் காணப்படுகிறது.
இந்நிலையில் வழுக்கியாற்றைப் புனரமைப்பு செய்து நிலத்தடி நீர்த் தேவை மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஏதுநிலைகள் குறித்த ஆய்வுகளை பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
அதன் ஆரம்ப நிகழ்வில் விவசாயிகள், அரச திணைக் களத்தை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments