நாட்டில் வசிக்கும் இஸ்ரேலிய பிரஜைகள் தங்கள் மத நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஓய்வெடுக்கவும், உணவு மற்றும் பானங்களைப் பெறவும் நிறுவப்பட்ட சபாத் மையங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து பொலிஸார் தெளிவுபடுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பல பொலிஸ் பிரிவுகளில் நிறுவப்பட்ட சபாத் மையங்களுக்கு நிலவும் அச்சுறுத்தலுக்கு அமைய 24 மணி நேர பாதுகாப்பை வழங்க சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வசிக்கும் எந்தவொரு வெளிநாட்டினரின் பாதுகாப்பிற்கும் ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால், இலங்கை பொலிஸ் அதை மதிப்பிட்டு தேவையான பாதுகாப்பை வழங்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
No comments