Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

''ஈ சாலா கப் நம்தே!''


ஆமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையேயான ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது

இதன் மூலம், ஆர்சிபி அணியின் 18 வருட கனவு நிறைவேறியுள்ளது. தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது 

ஆர்சிபி. ஐபிஎல் தொடங்கியது முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்ற ஒரே அணியில் விளையாடிவரும், விராட் கோலிக்கு இது மறக்கமுடியாத ஒரு வெற்றியாகும்.

ஆர்சிபி பல வருடங்களாக தோல்விகளைச் சந்தித்து வந்தபோதும் அதன் ரசிகர்கள் குறையவில்லை, தொடர்ந்து அதிகரித்தவண்ணமே இருந்தனர். அவர்கள் இந்த வெற்றியை கொண்டாடிவருகின்றனர்.

2025 ஐபிஎல் இறுதிப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகளை இழந்து, 190 ரன்கள் எடுத்தது. 

இதன் மூலம் பஞ்சாப் அணிக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அந்நிலையில் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.








No comments