மஹாவ, தியபாத்தே பகுதியில் உள்ள ஒரு காட்டில் காருக்குள் எரிந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குருநாகல் மில்லாவா பகுதியைச் சேர்ந்த ஹோட்டல் தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொழிலதிபர் கடந்த 25 ஆம் திகதி தலைமுடி வெட்டுவதற்காக வீட்டை விட்டுச் சென்றிருந்த நிலையில், அவர் வீடு திரும்பாததால் அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்துள்ளார்.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காட்டுப்பகுதி ஒன்றில் காருடன் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மஹாவா தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments