அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன, பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, ஜூன் 11 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஊழல் மற்றும் மோசடி குற்றங்களில் தொடர்புடைய கைதி ஒருவரை, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக விடுதலை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மொஹான் கருணாரத்ன கைது செய்யப்பட்டார்.
No comments