சர்வதேச இரத்த தான தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகம் , யாழ் . போதனா வைத்தியசாலையுடன் இணைந்து இரத்த தான நிகழ்வினை நடத்தவுள்ளது.
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 09 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் இரத்த தான முகாம் நடைபெறவுள்ளது.
மனிதாபிமானம் நிறைத்த இந்த செயல்முறையில் கலந்து கொள்ள அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் , இரத்த தான முகாமில் கலந்து கொள்வோருக்கு , மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்படவுள்ளது.
சமூகத்தில் இரத்த தானத்தின் முக்கியத்துவத்தையும் , சூழலியல் பாதுகாப்பையும் ஒருசேர வலியுறுத்தும் நோக்குடனையே இந்த இரத்த தான முகாம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக இந்திய துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.
No comments