Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Thursday, June 26

Pages

Breaking News

மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்களுக்கு நீதி கோரி போராடிய மூவர் கைது


மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற மகப்பேற்று சிகிச்சைகளின் போது மரணமடைந்த சிந்துஜா, பட்டித்தோட்டத்தை சேர்ந்த வேனுஜா மற்றும் அவரின் சிசுவின் மரணத்துக்கு நீதி கோரி போராடிய மூவர் நேற்றைய தினம் சனிக்கிழமை மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக பொது மக்களை ஒன்று கூட்டியமை மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட பல பிரிவுகளில் சம்மந்தப்பட்ட மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக பொது அழைப்பின் பெயரில் ஒன்றுகூடிய மக்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெறும் பல்வேறு சீர்கேடுகளுக்கு எதிராக அமைதியான போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் பல மாதங்கள் கழித்து மக்கள் சார்பாக போராட்டத்தில் கலந்துகொண்ட மூவரை மன்னார் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளர்.