Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Friday, June 20

Pages

Breaking News

சிறுவர்களின் நலன்சார் உத்தியோகத்தர்களுக்கு வழிகாட்டுதல் கலந்துரையாடல்


சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களும் வழிகாட்டுதல் கலந்துரையாடல் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் சுஜீவா சிவதாஸ் தலைமையில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் பிரதம அதிதியாகவும், சுகாதார அமைச்சின் செயலர் ஜெயராணி பரமோதயன் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றனர். 

வளவாளர்களாக ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி ம.தற்பரன் ஆகியோர் பங்குபற்றினர்.

இதன் முக்கியத்துவம் மற்றும் தொடர்ச்சியான செயற்பாடுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளரால் கருத்து முன்வைக்கப்பட்டது.

பிரதம செயலாளர், நன்னடத்தை திணைக்கள ஆணையாளரால் தெரிவித்த விடயங்களை தன்னால் உணரக்கூடியதாக இருந்ததாகவும், கலந்துரையாடுல்கள், வழிகாட்டுதல் செயலமர்வுகள் அவசியம் என்றும் குறிப்பிட்டார். 

வளவாளராகப் பங்கேற்ற சிரேஸ்ட சட்டத்தரணி ம.தற்பரன், சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் இடர்பாடுகள் தொடர்பாகவும், நடைமுறைப்படுத்தலின் போது காணப்படும் கூட்டுப்பொறுப்புப் பற்றியும் கலந்துரையாடினார்.

  இந்தக் கலந்துரையாடலில், சிரேஸ்ட நன்னடத்தை உத்தியோகத்தர்கள், நன்னடத்தை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலகங்களில் கடமையாற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அலுவலர்கள், சிறுவர் உரிமை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்கள், உள சமூக உத்தியோகத்தர், லீட்ஸ் நிறுவனப் பிரதிநிதிகள், மனிதவள உத்தியோகத்தர், நன்னடத்தை திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.