பதுளையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மிஹிந்து பெரஹெராவின் போது, யானையொன்று குழம்பியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த பெரஹெரா ஆண்டுதோறும் பதுளை, சத்தர்மானந்த பிரிவேனா விகாரையால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
யானைகள், நடனங்கள் உள்ளிட்ட பல அம்சங்களுடன் நேற்று இரவு பெரஹெரா நடைபெற்றது.
இதன்போது வீதி உலாவில் ஈடுபட்ட யானையொன்று திடீரென குழம்பியதால் பெரஹெராவில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இருப்பினும், சிறிது நேரத்திற்குள் யானை, பாகனால் அமைதிப்படுத்தியதை அடுத்து, பெரஹெரா மீண்டும் தொடங்கியது.
No comments