யாழ்ப்பாணம் அனலைதீவு ஐயனார் கோவில் கலசங்களை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரிமிருந்து 06 பித்தளை கலசங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐயனார் கோவிலில் இருந்து பித்தளை கலசங்கள் காணாமல் போயிருந்தன. அது தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் , ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சந்தேகத்தில் ஒருவரை கைது செய்து , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தன் அடிப்படையில் 06 கலசங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த நபரை பொலிஸ் நிலையத்தில் தொடர்ந்து தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
No comments