Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அனுராதபுரம் செல்வோருக்காக புதிய APP


பொசன் நிகழ்வை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு வருகை தரும் மக்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் கையடக்க தொலைபேசி செயலி ஒன்றின் ஊடாக வழங்குவதற்கு, பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.  

 QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் ஊடாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட இந்த கையடக்க தொலைபேசி செயலியை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த செயலியின் பயன்பாட்டின் ஊடாக வாகன தரிப்பிடங்கள் மற்றும் அந்த தரிப்பிடத்தில் காணப்படும் வாகனங்களின் எண்ணிக்கை, தானசாலை (தன்சல்) உள்ள இடங்கள், முதலுதவி, மலசலகூடங்கள் மற்றும் பாதுகாப்பாக நீராடக்கூடிய இடங்கள் தொடர்பிலான தகவல்களைப் பெற முடியும்.

பொசன் நிகழ்வை முன்னிட்டு, அனுராதபுரத்தில் இருந்து மிஹிந்தலையை முன்னிலைப்படுத்தி பல விசேட போக்குவரத்து திட்டங்களை  அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விசேட போக்குவரத்து திட்டம் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார். 

அதன்படி, அனுராதபுரம் புனித பூமி மற்றும் மிஹிந்தலை புனித பூமிக்குள் வாகன நிறுத்துமிடங்கள் நிறுவப்பட்டுள்ளன, 

மேலும் சாரதிகள் தங்கள் வாகனங்களை குறித்த இடங்களில் தரித்து வைக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments