Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கீரிமலை ஜனாதிபதி மாளிகை முதலீட்டாளர்களிடமே கையளிக்கப்படும்


கீரிமலையிலுள்ள ஜனாதிபதி மாளிகை பொதுமக்களின் இடங்களைக் கைப்பற்றிச் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது என்று வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது, 

கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள இடத்துக்கு 8 பேர் உரிமை கோரியுள்ளனர். அதனால் அந்த மாளிகையை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை முழுமையாகத் தீர்த்த பின்னரே மாளிகையை முதலீட்டாளர்களுக்கு வழங்கமுடியும்.

காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கிப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதா? அல்லது வேறு வழிகளில் தீர்ப்பதா? என்பது தொடர்பாக ஆலோசித்து வருகின்றோம். பிரச்சினையை விரைவாகத் தீர்த்து மாளிகையை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

ஜனாதிபதி அநுரகுமாரதிஸாநாயக்க இந்த மாளிகையை ஒருபோதும் உபயோகிக்கமாட்டார். இந்த மாளிகை மட்டுமல்ல நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளையும் அவர் உபயோகிக்கமாட்டார் - என்றார்.

No comments