Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி ஏற்றப்படவுள்ள அணையா தீபம்


செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி மூன்று நாட்கள் அணையா தீபம் என தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் செயல் அமைப்பு தெரிவித்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

குறித்த போராட்டமானது அணையா தீபம் ஏற்றி திங்கட்கிழமை காலை முதல் புதன்கிழமை மாலை வரையிலான மூன்று நாட்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.

போராட்டம் நடைபெறும் நாட்களில், செம்மணி புதைகுழிகள் தொடர்பான புகைப்பட கண்காட்சி ,  நாடக ஆற்றுகைகள் என எமது அடுத்த சந்ததியினருக்கு எமது வரலாற்றை கடத்தவுள்ளோம்.

அத்துடன், யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள ஐ.நா உயர் அதிகாரிக்கு மனித புதைகுழியில் பிரச்சினையின் ஆழத்தை வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனவே இந்த போராட்டத்திற்கு தமிழ் மக்கள், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தனர்.


No comments