Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

A9 வீதியில் வாகன விபத்து - ஒருவர் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் கட்டுகஸ்தோட்டை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

 பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். 

சம்பவத்தில் 58 வயதுடைய பரகொட, அலுதெணிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்தார். 

சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் 41 வயதுடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments