போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் 1000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முதற்கட்ட புனரமைப்பு வேலைகள் நேற்றைய தினம் சனிக்கிழமை காங்கேசன்துறை கல்லூரி வீதியின் புனரமைப்பு வேலைகளுடன் ஆரம்பமாகியது.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஜீவநாதன் , மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண பணிப்பாளர் குரூஸ் , வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
No comments