Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி குடைசாய்ந்தது


நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக நானுஓயா  பொலிஸார் தெரிவித்தனர். 

நானுஓயா ரயில் சுரங்கப்பாதைக்கு அருகில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

நானுஓயா பிரதான நகரில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு பயணிக்கும் போதே விபத்து இடம்பெற்றதாகவும் , அதன் போது, முச்சக்கர வண்டி சாரதியும்,  இரண்டு பாடசாலை மாணவர்களும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர் எனவும் அதிவேகமே விபத்துக்கான காரணம் என  நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை நுவரெலியா பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அப்பகுதிகளில் வாகனம் செலுத்துவோர் கவனமாக இருக்குமாறு நானுஓயா பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக்கொள்கின்றனர்.

No comments