வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக தெரிவாகியுள்ள தியாகராசா நிரோஸ்க்கு தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்றைய தினம் புதன்கிழமை சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
அதன் போது, பிரதேச சபை தவிசாளராக தி. நிரோஸ் தெரிவு செய்யப்பட்டார். அதனை அடுத்து தொழிலதிபர் சுலக்சன் தனது வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்தார்.
தொழிலதிபர் சுலக்சனின் வழிகாட்டலில் போட்டியிட்ட சுயேட்சை குழுவில் சி. சிவநிக்சன் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
No comments