Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வீட்டு திட்டத்தை விரைந்து கட்டி முடியுங்கள் - பயனாளிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்தல்


மாரி மழைக்கு முன்னர் வீடுகளை கட்டி நீங்கள் குடியமரவேண்டும். உங்கள் கட்டுமானத்தின் முன்னேற்றத்தை எவ்வளவு விரைவாகச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்து அடுத்தடுத்த கட்டக் கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்ளுங்கள் என வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வீட்டு திட்ட பயணிகளுக்கு தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் மூலம் வீட்டு திட்டத்திற்கு தெரிவான பயனாளிகளுக்கு முதல் கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

உங்களுக்கு சிறிய வீடு அமைக்க நாம் உதவுகின்றோம். அதைப் பெரிய வீடாக மாற்றுவது உங்களின் திறமையில்தான் தங்கியிருக்கின்றது. 

அதைப்போல எதிர்வரும் மாரி மழைக்கு முன்னர் வீடுகளை கட்டி நீங்கள் குடியமரவேண்டும். உங்கள் கட்டுமானத்தின் முன்னேற்றத்தை எவ்வளவு விரைவாகச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்து அடுத்தடுத்த கட்டக் கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என ஆளுநர் தெரிவித்தார். 

அதேவேளை வடக்கு மாகாண பிரதம செயலாளர், 

எவ்வளவோ பேர் வீடுகள் தேவையுடையதாக இருக்கத்தக்கதாக நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். விரைவாக வீடுகளைக்கட்டி குடியமரவேண்டும் என்றார்.

வீடுகளைக் கட்டுவதில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் தன்னைத் தொடர்புகொள்ளுமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டதுடன், வீடுகளைக் கட்டுவதற்குத் தேவையான மூலப்பொருட்களை காலநேரத்துடன் கொள்வனவு செய்யுமாறும்  பயனாளிகளுக்கு அறிவுறுத்தினார். 

No comments