வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட 2430/25 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத்தடை விதிக்குமாறுகோரி ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
வட மாகாணத்தில் 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அதனை இரத்துச்செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போதுவரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் நேற்றைய தினம் வியாழக்கிழமை உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
No comments