மட்டக்களப்பு, வாகரை, பனிச்சங்கேணி வாவிக்கு நீராடச்சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
மரணமடைந்த மூவரில் சிறுமி ஒருவரும் உள்ளடங்குவதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மூவரும் 10 மற்றும் 11 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்ததோடு, மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments