Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் வவுனியா இளைஞன் கைது


சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 10ஆயிரம் வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.  

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

சந்தேக நபர் வவுனியா பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் ஆவார்.  

சம்பவம் தொடர்பில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

No comments