Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

முன்னாள் முதலமைச்சர்கள் மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை


முன்னாள் முதலமைச்சர்கள் மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சப்ரகமுவ மாகாண முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத், 

மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜெயரத்ன ஆகியோருக்கு எதிராக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முன்னாள் முதலமைச்சர்கள் சட்டவிரோதமாக  வருமானம் ஈட்டியதாக கூறப்படும் முறைப்பாடுகளைக் கருத்திற் கொண்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments