Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

திருகோணமலையில் பொலிஸாரினால் எடுத்து சொல்லப்பட்ட தியாக தீபத்தின் திருவுருவ படம்


தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கடந்த நான்கு நாட்களாக திருகோணமலையில் இடம்பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை பொலிசாரால் தியாக தீபத்தின் திருவுருவ படம்  அகற்றப்பட்டுள்ளது. 

கடந்த திங்கட்கிழமை தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களால், திலீபனின் உருவப்படம் சிவன் கோயிலடியில் நிறுவப்பட்டு தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மாலை 5.15 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

இந்நிலையில் இன்றைய தினம் திருகோணமலை பிரதான பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகளால் குறித்த நினைவுபடம் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

No comments