யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் 18 வயது இளைஞன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 110 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடனும் , 30 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் 18 , 22 மற்றும் 23 வயதுகளுடைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments