Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஒன்றரை இலட்ச ரூபாய் மாதாந்த வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா பயிர் செய்கையில் ஈடுபட்ட பெலாரஸ் பிரஜை கைது


அக்மீமன பகுதியில் வாடகைக்கு பெறப்பட்ட வீட்டில்  கஞ்சா பயிரிட்டு வந்த பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரை காலி மாவட்ட குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர். 

குறித்த வீட்டின் இரண்டு அறைகளில் அவர் கஞ்சா பயிரிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்காக அவர் அந்த செடிகளை பயிரிட்டுள்ளதாக பொலிஸார் முன்னெடுத்த முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

குறித்த வீடு கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு சொந்தமானது என்றும், 

சந்தேக நபர் வீட்டை வாடகைக்கு எடுத்து அதற்காக மாத வாடகையாக 1.5 இலட்சம் ரூபாவை செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments