யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை பெற்றோல் குண்டு வீச்சு இடம்பெற்றுள்ளது.
கந்தரோடை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று , வீட்டின் கண்ணாடிகளை அடித்து உடைத்து விட்டு , வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சினை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 





 
 
 
No comments