Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஹெரோயினுக்கு ஈஸி கேஷ் மூலம் காசு கொடுத்த இளைஞன் - வீதியில் வீசப்பட்ட ஹெரோயினை எடுக்க வந்த போது போலீசாரிடம் சிக்கினார்


ஈஸி கேஷ் முறையின் மூலம் பணம் செலுத்தப்பட்ட ஹெராயின் பொட்டலத்தை எடுத்துச் செல்ல வந்த இளைஞன், ஹட்டன் பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார்.

ஹட்டன்–பொகவந்தலாவ பிரதான வீதியிலுள்ள டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் நின்ற இளைஞன் மீது பொலிஸ் அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர்.

இளைனனின் நடத்தை சந்தேகத்துக்குரியதாக இருந்ததால், பொலிஸார் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோதனை செய்தபோது, பிரதான வீதியின் அருகிலுள்ள புல்வெளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெராயின் பொட்டலத்தை கண்டுபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் டிக்கோயா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆவார். 

அவர்  6,000 ரூபா  செலுத்தி, ஈஸி கேஷ் அமைப்பு மூலம் போதைப்பொருள் பொட்டலத்தை வாங்கியிருப்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சோதனையை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸ் பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், போதைப்பொருள் விநியோக வலையமைப்பை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட வியாபாரியை கைது செய்வதற்காக சந்தேக நபரின் தொலைப்பேசி தரவுகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

No comments