Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பிரான்ஸில் இருந்து நாடு திரும்பிய இளைஞன் யாழில் படுகொலை


பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி பகுதியை சேர்ந்த ராஜகுலேந்திரன் பிரிந்தன் (வயது 29) என்ற இளைஞனே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் நீண்ட காலமாக, பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த ஒரு சில வருடங்களின் முன்பு நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

அந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணொருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணம் வருகை தந்து இளைஞனை பதிவு திருமணம் செய்து சென்ற நிலையில், இளைஞன் மீண்டும் வெளிநாடு செல்ல இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞனுக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்ததை அடுத்து இளைஞன் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை வீட்டிற்கு சற்று தொலைவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இளைஞன் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதேவேளை இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

குறித்த இரு இளைஞர்கள் தொடர்பில் , அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன் இளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பு தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments