Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மன்னார் நீதிமன்றின் முன் துப்பாக்கி சூட்டு சம்பவம் ; 11 மாதங்களின் பின் கைக்குண்டுடன் இருவர் கைது!


மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி அன்று இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் , கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த  பிரதான சந்தேக நபரும், அவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டு முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

சந்தேக நபர்கள் 22 மற்றும் 38 வயதுடைய உயிலங்குளத்தை வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

No comments