Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

டக்ளஸ் தேவானந்தா 72 மணி நேர தடுப்பு காவலில்


கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளனர்.

இராணுவத்தினால் அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, வெலிவேரிய பகுதியில் பாதாள உலகக் குழு குற்றவாளி ஒருவரிடம் இருந்தமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, அவர் நேற்று நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 72 மணி நேர தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய மன்று அனுமதித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு, பாதாள உலகக் குழு தலைவனான 'மாகந்துரே மதூஷிடம்' நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தால் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்த பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. 

இது குறித்த விசாரணைகளின் பின்னணியிலேயே முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  கைது செய்யப்பட்டார்.

No comments