Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கடலில் மூழ்கி வைத்தியர் உயிரிழப்பு


மிரிஸ்ஸ கடலில் நீந்திக் கொண்டிருந்த வைத்தியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிகம காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

வெலிகம காவல் பிரிவின் மிரிஸ்ஸ பகுதியில் கடலில் நீந்திக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

கடலில் மூழ்கிய வைத்தியரை அப்பகுதி மக்கள் மீட்டெடுத்து, அவசர ஆம்புலன்ஸ் சேவை மூலம் மாத்தறை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், வெலிகம வாலன மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியாக இருந்த 49 வயதான தேஜன் ஜெயசேகர என்ற வைத்தியர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த வைத்தியர் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு அதிகாரப்பூர்வ பணிகளுக்காக வாலன மருத்துவமனைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

No comments